தாம்பரம்: தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் பகுதியில், ரூ.2.25 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய நகர்ப்புற நலவாழ்வு மையத்தை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ரூ.2.25 கோடி மதிப்பீட்டில், 9 புதிதாக நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டு, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று 5வது மண்டலம் ஆனந்தபுரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்தார்.