திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: தமிழக அரசால் 2022-23ம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதிற்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த திருநங்கைகள், இந்த விருதிற்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (awards.tn.gov.in) வருகிற 28ம் தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும். திருநங்கையர் தின விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்களை அனுப்புவதற்கான விதிமுறைகள், திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது.

கையேட்டில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், உயிர் தரவு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2, சுயசரிதை, தனியரைப் பற்றிய விவரம் (ஒரு பக்க அளவில்), விருதுகளின் விவரம் (விருது பெற்றிருப்பின் அதன் விவரம் விருதின் பெயர்/யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்), சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையை பாராட்டி பத்திரிகை செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின்/சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூகப் பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, கையேடு தமிழில் அச்சு செய்யப்பட்டு தலா 2 நகல்கள் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: