வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் மையம் நடத்திய தேர்வில் உலகின் சிறந்த அறிவாற்றல் மாணவியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா இரண்டாவது முறையாக தேர்வாகியுள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா (13). இவரது பெற்றோர் சென்னையை சேர்ந்தவர்கள். நடுநிலைப்பள்ளியின் 5வது கிரேட் மாணவியான இவர், கடந்த ஆண்டு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம் நடத்திய திறமைவாய்ந்த இளைஞர்களுக்கான தேர்வில் கலந்து கொண்டார். இதில் இந்திய வம்சாவளி மாணவி நடாஷா வெற்றி பெற்று கவுரவிக்கப்பட்டார்.