ஹவுரா: ஜார்க்கண்ட் மாநில யூடியூபரும், நடிகையுமான ரியா குமாரி என்பவர் கடந்த டிசம்பர் 28ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் அவரது கணவர் பிரகாஷ் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 150 மீட்டர் தொலைவில் ரியா குமாரியை கொல்லப் பயன்படுத்திய துப்பாக்கியை தற்போது ஹவுரா போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து ஹவுரா போலீஸ் சூப்பிரண்டு (கிராமப்புற) ஸ்வாதி பங்காலியா கூறுகையில், ‘தனது மனைவி ரியா குமாரிக்கும், வேறொரு நபருக்கும் கள்ளக்காதல் இருந்தது.