கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை திடீர் சரிவு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. பண்டிகை நாள் மற்றும் முகூர்த்த நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 4,000க்கும் ஐஸ் மல்லி 3,000க்கும் முல்லை 2,500க்கும் ஜாதிமல்லி 2,500க்கும் காட்டுமல்லி 1,500க்கும் சாமந்தி 200க்கும் சம்பங்கி 180க்கும் பன்னீர் ரோஸ் 160க்கும் சாக்லேட் ரோஸ் 180க்கும் அரளி பூ 300க்கும் விற்பனை செய்யப்பட்டது. முகூர்த்த நாள் இல்லாததால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 1,500க்கும் ஐஸ் மல்லி 1,000க்கும் காட்டுமல்லி 500க்கும் ஜாதிமல்லி 2,500க்கும் முல்லை 2,500க்கும் கனகாம்பரம் 400க்கும் பன்னீர் ரோஸ் 30க்கும் சாக்லேட் ரோஸ் 50க்கும் சாமந்தி 40க்கும் சம்பங்கி 20க்கும் அரளி பூ 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’முகூர்த்த நாள் ஏதும் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. பூக்களின் விலை குறைந்தாலும் பூக்களை வாங்குவதற்கு சென்னை புறநகர் வியாபாரிகள் வருகை குறைந்ததால் வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர். இன்னும் 5 நாட்கள் பூக்களின் விலை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். முகூர்த்த நாள் வரும்போது பூக்களின் விலை மீண்டும் உயரும்’ என்றார்.

Related Stories: