திருவனந்தபுரம்: பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகத்தில் நேற்று தொடங்கிய காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடக்கிறது.கேரள சட்டசபையில் கடந்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ₹2 வரி உயர்வு அறிவிக்கப்பட்டது. இது தவிர மேலும் பல பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. இதை கண்டித்து நேற்று கேரள சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.