கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கட்டு வாழை இலை ரூ1,200: வரத்து அதிகரிப்பால் விலை குறைந்தது

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் கடப்பா, தமிழகத்தில் ஆண்டிப்பட்டி, மதுரை, வத்தலக்குண்டு, வேலூர், தஞ்சாவூர் மற்றும் தேனி ஆகிய பகுதிகளில் இருந்து வாழை இலை கட்டுகள் லாரிகள் மூலம் வருகிறது.கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்ந்து 25 நாட்களாக ஒரு கட்டு வாழை இலை 2,500க்கும் சிறிய கட்டு வாழை இலை 1,500க்கும் ஒருதலை வாழை இலை 10க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை திடீரென்று வாழை இலை கட்டுக்கள் விலை குறைந்தது. ஒரு கட்டு வாழை இலை 1, 200க்கும் சிறிய கட்டு வாழை இலை 500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஒருதலை வாழை இலை 5 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சென்னை புறநகர் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வாழை இலை கட்டுகளை வாங்கி சென்றனர். இதுகுறித்து சென்னை புறநகர் வியாபாரிகள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்ந்து 25 நாட்களாக வாழை இலையின் விலை குறையாமல் இருந்தது. ஒரு கட்டு வாழை இலை 2,500க்கு விற்பனை செய்யப்பட்டது 1,200க்கும் சிறிய கட்டு வாழை இலை 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: