வடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 5ம் தேதி ஆறு காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பத்தில் திரு அறை தரிசனம் நடைபெறுவதையொட்டி வடலூர் சத்தியஞானசபையில் இருந்து (பேழை) வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் கொண்ட பெட்டி மற்றும் உருவப்படம் பூக்களால் அலங்கரித்து வள்ளலார் நடந்து வந்த பாதை வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.