திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்த காளை மாட்டுடன் பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை துவங்கியது. இத்திருவிழாவையொட்டி காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் கிராம மக்கள் குழுவாக சேர்ந்து விரதம் இருந்து, காவடி எடுத்து வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.