கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தடுப்புக்கட்டையின் மீது மோதி கார் தீ பிடித்து எரிந்து முழுவதும் சேதமானது. இதில் பயணம் செய்த சென்னை வாலிபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். சென்னை ஆவடி பகுதியை சேர்ந்த முத்தையன் மகன் திலீபன் செல்வகுமார் (32). இவர் சொந்த வேலை காரணமாக காரில் சென்னையில் இருந்து கோயம்புத்தூர் சென்று வேலையை முடித்துவிட்டு, பின்னர் தனது வீட்டிற்கு செல்ல கோயம்புத்தூரில் இருந்து நேற்று இரவு கிளம்பி சென்னை வந்து கொண்டிருந்தார்.