சென்னை: சென்னையில் குடியிருப்பு, நிறுவனங்களில் ஒரு மாதத்தில் 1,813 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ரூ.5.98 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளால் மழைநீர் செல்வது தடைபட்டு நீர்த்தேக்கம் ஏற்படுவதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.