காஞ்சிபுரத்தில் 12 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா: காஞ்சிபுரம் ஆட்சியர்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 13 பயனாளிகளுக்கு ரூ.6.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 230 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, உத்திரமேரூர் வட்டம் திருவானைகோயில் கிராமத்தை சேர்ந்த 12 பயனாளிகளுக்கு ரூ.5.76 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும், காவந்தண்டலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.50 ஆயிரத்துக்கு கடனுதவி காசோலையும் ஆட்சியர் வழங்கினார்.

Related Stories: