லிமா : பெரு நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. பெரு நாட்டில் கடந்த வாரம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. தெற்கு அரேகொய்பா பிராந்தியத்தில் கொட்டித் தீர்த்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் செகோச்சா பகுதியில் இருந்த வீடுகள் பல இடிந்து விழுந்தன. சாலைகள் எங்கும் கட்டிட இடிபாடுகள் குவியலாக காட்சி அளிக்கின்றன. எதிர்பாராத இயற்கை பேரிடரில் செகோச்சாவில் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார்.