மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதில் குழப்பம்: அன்புமணி டிவிட்

சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதில் குழப்பம் இருப்பதாகவும், இதற்கு மின்வாரியம் விளக்கமளிக்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்னுடன் ஆதாரை இணைப்பதில் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மின் இணைப்பு எண்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. மின் இணைப்பு எண்- ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன என்பதை இப்போதாவது மின்வாரியம் தெரிவிக்க வேண்டும். வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்களை அனுப்பி ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களைப் பெற்று அவற்றை இணைப்பதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: