பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வருகிறது ஒன்றிய குழு

சென்னை: பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக நெல் கொள்முதல் செய்யும் பொழுது அதன் ஈரப்பதம் 19 சதவீதம் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்  22சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் பிரதமருக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள தர கட்டுப்பாட்டு ஆய்வகத்தின் அதிகாரிகளான பிரபாகரன், யூனுஸ், போயா என 3 தொழில்நுட்ப அதிகாரிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழு தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்பால் நெல் விளைச்சலின் பாதிப்பையும், இழப்பின் அளவையும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாதிரிகளை சேகரிக்கும். அம்மாதிரிகள் எப்சிஐ மற்றும் தமிழ்நாடு மண்டல ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு ஒருங்கிணைந்த அறிக்கையை உடனடியாக உணவு மற்றும் பொது விநியோக துறைக்கு சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: