போக்சோ வழக்கில் சிக்காமல் இருக்க மலேசியா தப்பிய குற்றவாளி கைது: சென்னை திரும்பியபோது சிக்கினார்

சென்னை: போக்சோ வழக்கில் சிக்கி, ஓராண்டாக மலேசியாவில் தலைமறைவாக இருந்தவர் பிடிபட்டார். கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம், கோஷ்துர்க் போலீஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர், அபூபக்கர் பட்டிலாத்து (38). இவர் மீது கோஷ்துர்க் போலீஸ் நிலையத்தில், கடந்த ஆண்டு சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக, போக்சோ வழக்கு பதிவாகியிருந்தது.

இதையடுத்து கேரளா போலீசார், அபூபக்கர் பட்டிலாத்து மீது வழக்குப்பதிவு செய்து தேடினர். ஆனால் பட்டிலாத்து, போலீஸிடம் சிக்காமல் கடந்த ஓராண்டாக தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளார், மேலும் பாட்டிலாத்து, வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டாதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து கேரள மாநிலம், காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அபூபக்கர் பட்டிலாத்துவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்கள் எல்ஓசி போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணிகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். இதே விமானத்தில் கேரள மாநில போலீசாரால், போக்சோ வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு  குற்றவாளியான, அபூபக்கர் பட்டிலாத்துவும் மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். குடியுரிமை அதிகாரிகள் அபூபக்கர் பட்டிலாத்து பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தனர்.

அப்போது, கம்ப்யூட்டரில் இவர் கேரள மாநில போலீசாரால், போக்சோ வழக்கில் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்று காட்டியது. இதை அடுத்த குடியுரிமை அதிகாரிகள் பயணி அபூபக்கர் பட்டிலாத்து குறித்து, சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, போலீஸ்காவலும் ஏற்பாடு செய்தனர். மேலும் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, போச்சோ வழக்கில்  தேடப்பட்டு வந்த, தலைமறைவு  குற்றவாளி, மலேசியாவில் இருந்து விமானத்தில் வந்த போது, சென்னை விமான நிலையத்தில் சிக்கியுள்ளார். இதை எடுத்து காசர்கோடு மாவட்ட தனிப்படை போலீசார்,நேற்று, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அபூபக்கர் பட்டிலாத்துவை கைது செய்து, பலத்த பாதுகாப்புடன், கேரளாவுக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: