மதுரை: தேர்தலின்போது மட்டும் மக்களை அதிமுக தேடும். ஒன்றிய அரசு வாயில் வடை சுடுகிறது’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை, பாண்டிகோவில் கலைஞர் அரங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 70 ஆயிரம் பெண்களுக்கு ரூ.173 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: கிட்டத்தட்ட 75 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாங்கள் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.