லாரி மோதி இளம்பெண் பலி

புழல்: சென்னை புழல் எம்ஜிஆர் நகரை  சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருடைய மனைவி கவிதா (38). இவர், மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று மாலை பணி முடித்துவிட்டு,  டூவீலரில் வீட்டிற்கு சென்றார். புழல் கதிர்வேடு சிக்னலில் திரும்பும்போது, செங்குன்றத்திலிருந்து மூலக்கடை நோக்கி வந்த டிப்பர் லாரி டூவீலர் மீது மோதியது. இதில், லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதை பார்த்த  லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories: