பெரம்பூர்: பெரம்பூரில் மன நோயால் பாதிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பூர் ரமணா நகர் சுப்பிரமணிய பாரதி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (45). இவரது மனைவி பானுமதி (39). இவர்களுக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வினோத்குமார் கார் டிரைவர். கடந்த 2 மாதமாக பானுமதி மனநோயால் அவதிப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் பானுமதியின் உறவினர் மணிகண்டன் அவரை பார்க்க வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டாமல் கதவு திறந்து கிடந்தது. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் உள்ள ஹாலில் இருந்த மின்விசிறியில், பானுமதி தூக்கிட்டு இறந்த நிலையில் கிடந்துள்ளார்.