குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பகலில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்கள் நீர்நிலைகள் சார்ந்த சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல விரும்புகின்றனர். இதன் காரணமாக கோதையாறு அருவியாக கொட்டும் திற்பரப்பு அருவியில் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெயில் காரணமாக அருவியில் தண்ணீர் குறைவாக கொட்டி வருகிறது.