சென்னை: மின் கட்டணம் செலுத்திய ரசீது பதிவேற்றப்படவில்லை. இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என மின் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலம் ஒரு போலியான தகவல் பரப்பப்படுகிறது அதாவது கடந்த மாதம் மின் கட்டணம் செலுத்திய ரசீது இன்னும் பதிவேற்றப்படாததால் உங்களது மின் இணைப்பு இன்று இரவு துண்டிக்கப்படும்.