ஊட்டி : கேரளாவில் இருந்து கூடலூருக்கு ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ புகையிலையை பொருட்கள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் இருந்து கூடலூருக்கு, சட்டவிரோதமாக கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் லாரியில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கூடலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் காவல்துறையினர், ேகாழிப்பாலம் வழியாக கேரளாவில் இருந்து தேவர்சோலை, பாடந்தொரை பகுதிக்கு ஜல்லி மற்றும் கற்கள் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.