கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சினையுற்றிருந்த கோவில் பசுவுக்கு பொதுமக்கள் வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலப்பட்டு கிராமத்தில் திரிபுர சுந்தரியமை கோவிலுக்கு சொந்தமான பசு மாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை தட்டுகளை எடுத்துவந்தனர்.