சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையில் பிழைகளை திருத்தும் பணி முடியவில்லை என சிபிஐ தகவல் அளித்துள்ளது. பிழைகளை முழுமையாக திருத்த சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அவகாசம் கேட்டுள்ளது. பிழைகளை திருத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மீண்டும் அவகாசம் அளித்து வழக்கு பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.