மும்பை: குடிபோதையில் மனைவியை தாக்கி காயப்படுத்தியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது பாந்த்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் வீரரான வினோத் காம்ப்ளி, ஆன்டிரியா ஹேவிட் என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உண்டு. இவர்களுடைய வீடு மும்பை பாந்த்ரா மேற்கில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் ஒரு மணிக்கும் 1.30 மணிக்கும் இடையே வினோத் காம்ப்ளி குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாகவும், அப்போது மனைவியை அவர் திட்டியதாகவும் கூறப்படுகிறது.