வாணியம்பாடியில் 4 பெண்கள் உயிரிழப்புக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: வாணியம்பாடி நிகழ்ச்சியில் ஒன்றில், 4 பெண்கள் இறந்ததற்கு, எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வாணியம்பாடியில் ஒரு  தனியார் இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  சிக்கிய வயது முதிர்ந்த 4 மகளிர், தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற  செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். மரணமடைந்தவர்களின்  குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் துன்ப நிகழ்வுக்குக் காரணமான அதிகாரிகள் மீதும், நிகழ்ச்சியை  நடத்தியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்த அரசை வலியுறுத்துகிறேன். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இந்த அரசு அறிவித்த நிவாரணத்தை ரூ.10 லட்சம்உயர்த்தி வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நலத்திட்ட  உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, முன்னெச்சரிக்கையுடன் நடத்துவதற்குத் தேவையான உறுதியான  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: