சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: கலைஞருக்கு சென்னை கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்திற்கு அருகில் கடலுக்கு மத்தியில் பேனா வடிவ நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகைய முடிவை எதிர்த்து அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜிக்கு மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் சிலை அமைக்க முடிவு செய்து பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே.