சென்னை: வாணியம்பாடியில் தனியார் நிறுவன வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சியில் உயிரிழந்து 4 பெண்களுக்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: வாணியம்பாடியில் நடைபெற்ற தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியின் போது ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமா னோர் மயக்கமடைந்தும், 4 பெண்கள் உயிரிழந்திருப்பதும் துரதிர்ஷ்டவசமானது.