தாம்பரம்: தாம்பரத்தில் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு, பரனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி நிலா. இவர்கள் தாம்பரம் ரயில் நிலைய உலகத்தில் உள்ள பேருந்து நிலைய நடைமேடையில் தங்கி, கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேருந்து நிலையத்தில் பாபு மற்றும் நிலா தூங்கிகொண்டிருந்த போது, நிலா அருகில் படுத்திருந்த இருதயராஜ் என்பவர், நிலாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருகில் படுத்திருந்த தனது கணவரிடம் நிலா கூறியுள்ளார். இதையடுத்து பாபு, இருதயராஜை தட்டி கேட்டுள்ளார் இதனால் அவர்கள் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.