ஷாதோல்: மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் 20 முறை சூடான இரும்பு கம்பியால் சூடு வைத்ததில் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்தது. ஷாதோல் மாவட்டத்தை சேர்ந்தவர் சூரஜ் கோல். இவரது 3 மாத கைக்குழந்தை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளூரில் உள்ள பெண் வைத்தியரிடம் குழந்தையை கொண்டு சென்றனர். காய்ச்சலை குணப்படுத்துவதற்கு குழந்தையின் உடலில் 20 முறை சூடான இரும்பு கம்பியால் வைத்தியர் சூடு வைத்துள்ளார். இதில் குழந்தைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். 3 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை பரிதாபமாக இறந்தது.