திருப்பூரில் திராவிடர் கழகம் சார்பாக நடந்த சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசியதாவது: தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையிலான திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமலும், இங்கே ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியிலும் ஒன்றிய அரசு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் கிடக்கிறது.