இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுகவை வைத்து பாஜ பொம்மலாட்டம்

திருப்பூரில் திராவிடர் கழகம் சார்பாக நடந்த சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி பேசியதாவது: தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதியை பாதுகாக்கும் வகையிலான திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாமலும், இங்கே ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாத விரக்தியிலும்  ‌‌‌‌‌‌ஒன்றிய அரசு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் கிடக்கிறது.

இங்கே நாங்கள் வளர்ந்து விட்டோம், நாங்கள்தான் எதிர்க்கட்சி என கூறிக் கொள்ளும் பாஜ அதனை உறுதிப்படுத்த ஏன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை? பலத்தை நிரூபிக்க  அண்ணாமலையே போட்டியிட்டிருக்கலாமே? இதை செய்யாமல் அதிமுகவை வைத்து பாஜ பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்த ஒன்றிய பாஜ அரசு அதனை நிறைவேற்றவில்லை. இது குறித்து கேட்டால் சும்மா சொன்னதாக உள்துறை அமைச்சர் பதிலளித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: