கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து இடிந்தகரைக்கு நேற்று படகு போட்டி நடந்தது. நெல்லை மாவட்டம் இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலய திருவிழாவையொட்டி நேற்று பாய்மர படகு போட்டி நடைபெற இருந்தது. புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. எனவே படகு போட்டி நடத்தவும் போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் போலீசாரின் தடையை மீறி படகு போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதல் நெல்லை மாவட்டத்தில் இருந்து கோவளம் கடற்பகுதிக்கு 15க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவ இளைஞர்கள் வந்தனர்.