ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 18ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 31ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 3ம் தேதி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல தேமுதிக, அமமுக, அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் செந்தில் முருகன், நாம் தமிழர் கட்சி மேனகா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நேற்று முன்தினம் வரை மொத்தம் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வேட்புனு தாக்கல் நடைபெறவில்லை.