பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்றும், வெற்றிலை வரத்து குறைவாக இருந்ததால், ஒரு கட்டு ரூ.3100 வரை ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மற்றும் வெளியூர்களில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பனிப்பொழிவால், வெற்றிலைகளின் எண்ணிக்கை குறைந்து, அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த சில வாரமாக மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் வெற்றிலை கட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.