புதுடெல்லி: ராஜஸ்தான் எல்லையில், பாகிஸ்தானிலிருந்து போதை பொருள் கடத்தி வந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்ப்) வீரர்கள் நேற்றுமுன்தினம் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.