போதை பொருள் கடத்தல் பாக்.டிரோன் சுட்டு வீழ்த்தல்

புதுடெல்லி: ராஜஸ்தான் எல்லையில், பாகிஸ்தானிலிருந்து போதை பொருள் கடத்தி வந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு படையினர்(பிஎஸ்ப்) வீரர்கள்  நேற்றுமுன்தினம் இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் வந்த டிரோனை பிஎஸ்எப் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதில் 6 கிலோ  போதை பொருள் இருந்தது. இதே போல், பஞ்சாப்பில் டிரோன் மூலம் கடத்தப்பட்ட 5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: