பிரயாக்ராஜ்: நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்த நிலையில் யாரும், யாருக்கும் எச்சரிக்கை கொடுக்க முடியாது என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்துள்ளார். உபி மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த விழாவில் பங்கேற்று பேசிய ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: பொதுமக்கள் தான் இந்த நாட்டின் எஜமானர்கள். நாங்கள் வேலைக்காரர்கள்.