சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.வி.குருபாதம் என்ற மயிலை குருபாதம் (75), பெங்களூருவில் நேற்று காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். டி.ராஜேந்தர் இயக்கத்தில் ஸ்ரீநாத், ஜோதி நடித்த ‘ரயில் பயணங்களில்’, சிவகுமார் நடித்த ‘கற்பூர தீபம்’, ரஜினிகாந்த் நடித்த ‘லட்சத்தில் ஒருவன்’, சரத்குமார் நடித்த ‘இதுதாண்டா சட்டம்’, கமல்ஹாசன் நடித்த ‘இரு நிலவுகள்’, அர்ஜூன் நடித்த ‘என் சபதம்’ ஆகிய தமிழ்ப் படங்களையும், தெலுங்கில் என்.டி.ராமாராவ், சிரஞ்சீவி, ஜெயப்பிரதா நடித்த சில படங்களையும் தயாரித்துள்ளார். மயிலை குருபாதத்துக்கு மனைவி ஆர்.வி.கமலா, மகள் ஆர்.வி.கோதா, மகன் ஆர்.வி.ரவி ஆகியோர் உள்ளனர். மயிலை குருபாதத்தின் உடல் பெங்களூருவில் இருந்து ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.