சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னையில் தமிழக மாணவர் காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் நிறைவடைந்தது. இதை முன்னிட்டு, ‘கையோடு கைகோர்ப்போம்’ என்கிற மாபெரும் பரப்புரை இயக்கத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், தமிழக மாணவர் காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி சென்னையில் நேற்று நடைபெற்றது.
அகில இந்திய மாணவர் காங்கிரசின் மேலிட பொறுப்பாளர் நாகேஷ் கரியப்பா முன்னிலையில், மாணவர் காங்கிரசின் வாகன பேரணி சத்தியமூர்த்தி பவனில் இருந்து, அதன் தலைவர் சின்னதம்பி தலைமையில் புறப்பட்டது.