கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில், காயரம்பேடு, மூலக்கணி, விஷ்ணுப்பிரியா நகர், தமிழ்ச்செல்விநகர், கண்ணன் நகர், வீனஸ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு வீனஸ்நகர் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு 64 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ7 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டுமான பணி நடந்து வருகிறது.