புதுடெல்லி: வரும் நிதியாண்டில் 7000கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘ ரயில்வே பயணிகளின் முன்பதிவு இறுதி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். தற்போது நிமிடத்துக்கு 25ஆயிரம் டிக்கெட் வழங்கும் திறன் உள்ளது.