திருச்சி: ‘பகுதிநேர ஆசிரியர்களுக்கு, முதல்வரிடம் இருந்து விரைவில் நல்ல பதில் கிடைக்கும்’ என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய அன்றே அவர்களுடனான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 30 மாவட்டத்தை சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள் அடங்கிய மனுவை என்னிடம் அளித்தனர். முதல்வருடன், வேலூர் பயணம் மேற்கொண்டபோது ரயிலில் இதுகுறித்து பேசினேன்.