அண்ணாநகர்: கோயம்பேட்டில் உள்ள பிரபல தியேட்டரில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கின் தண்ணீர் தொட்டியில் இருந்து நேற்று மதியம் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, ஊழியர்கள் தொட்டியின் மூடியை திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த கோயம்பேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.