சண்டிகர்: 2022-23ம் நிதியாண்டுக்கான கேரள பட்ஜெட்டை நிதியமைச்சர் கே.என். பாலகோபால் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். அதில், பெட்ரோல், டீசல், மது, மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றுக்கு வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.2 வரை உயரும். இதற்கிடையே பெட்ரோல்,டீசலுக்கு லிட்டருக்கு 90 பைசா செஸ் வரியை பஞ்சாப் அரசு விதித்துள்ளது. இதனால், அங்கும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும்.