×

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.1.15 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.40 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட தங்கம் சென்னையில் இருந்து கடத்த வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர் .

அதில் சென்னை பயணிடம் 4 பார்சல்களில் இருந்து ரூ.75 லட்சம் மதிப்புள்ள 1.5 கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்துள்ளனர். சென்னையில் இருந்து சிங்கப்பூர், துபாய் செல்ல இருந்த 2 பேரை சோதனை செய்ததில் ரூ.40.6 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai airport , Gold worth Rs 1.15 crore seized at Chennai airport
× RELATED சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா திட்டம் அறிமுகம்: வரும் 31ம் தேதி அமல்