சென்னை: ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கவில்லை என்ற தேர்தல் ஆணைய பதிலுக்கு பழனிசாமி தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. சசிகலா வழக்கு நிலுவையில் இருந்தபோதும் பன்னீர் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது எப்படி? என பழனிசாமி அணியின் அதிமுக சட்டப்பிரிவு நிர்வாகி இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.