சென்னை: ‘கள ஆய்வில் முதல்வர்’ நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், உணவு தயாரிக்கும் மையம், பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வுசெய்தார். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோனை செய்தார். இதில், வேலூர், ராணிப்ேபட்டை, திருப்பத்தூர் உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்பட பலர் பங்கேற்றனர். இதற்காக வேலூருக்கு 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரயில் மூலம் காட்பாடிக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேற்று இரவு 7.10 மணியளவில் தன்பாத் ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். அவரை அமைச்சர்கள், எம்.பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.