ஒரே சிவில் சட்டம் அமல்; இப்போது முடிவு இல்லை

புதுடெல்லி: நாட்டில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து  இப்போதைக்கு  ​​எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பதில் வருமாறு:

ஒரே சிவில் சட்டம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குமாறு 21வது சட்ட ஆணையத்திடம் அரசு கோரிக்கை வைத்துள்ளது.      எனவே ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போதைய சட்டக் குழுவின் பதவிக்காலம் இம்மாத இறுதியில் முடிவடைகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: