சென்னை: அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட வில்லிவாக்கம் மயானபூமியில் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளதால், பொதுமக்கள் வேலங்காடு மற்றும் அரும்பாக்கம் எரிவாயு மயானபூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், வார்டு-94க்குட்பட்ட வில்லிவாக்கம் மயானபூமியில் தற்போது உடல்களை எரியூட்ட செயல்பட்டு வந்த Bio Gasifier அமைப்பை, LPG அமைப்பாக மாற்றவும் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளவும் 20.12.2022 முதல் 03.02.2023 வரை 45 நாட்களுக்கு தற்காலிகமாக மயானபூமி இயங்காது என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.