கோவை கருத்தம்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் காயம்

கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி கணபதி நகர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை மல்லிகா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். அப்பொழுது சோமனூர் சாலையை இருசக்கர வாகனத்தில் கடக்க முயன்ற போது கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதியது. இதில் மல்லிகாவுடன் பயணித்த இரண்டு குழந்தைகளும் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே இருசக்கர வாகனங்கள் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் மல்லிகா தனது இரண்டு குழந்தைகளுடன்  சாலையை கடக்க முயல்வதும்  கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி சிதறுவதும் அதில் அனைவரும் தூக்கி வீசப்படும் பதை பதைக்கும்  காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: