திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூர் ஊராட்சி வெங்கத்தூர் கண்டிகையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 160 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு போதிய இடவசதியில்லாததால் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டனர். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டவேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலகோகி கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் சார்பில், இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.